ATM கார்டு இல்லாமலேயே ATMல் இருந்து பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிமுகம்!
ATM கார்டு பயன்படுத்தாமல் ATMல் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய வசதியை பேங்க் ஆஃப் பரோடா வங்கி தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், எப்படி ATMல் இருந்து பணம் எடுக்கலாம் என்பதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி
ATM கார்டு இல்லாமலேயே ATMல் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய வசதியை பேங்க் ஆஃப் பரோடா வங்கி தற்போது தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் Interoperable Cardless Cash Withdrawal- ICCW என்கிற வசதியின் மூலமாக கார்டு இல்லாமலேயே ATMல் இருந்து பணம் எடுக்கலாம். அதாவது, முதலில் ATM திரையில் காண்பிக்கப்படும் ‘யுபிஐ கேஷ் வித்டிராயல்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர், திரையில் தெரியும் QR code ஐ ICCW செய்யப்பட்ட யுபிஐ ஆப் பயன்படுத்தி இந்த QR code ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை – வெளியான முக்கிய தகவல்!
இதன் பின்னர், ATMல் இருந்து பணம் எடுப்பதற்கு உங்களது மொபைலில் UPI PIN நம்பரை உள்ளிட வேண்டும். மேலும், பிற வங்கி வாடிக்கையாளர்களும் டெபிட் கார்டு இல்லாமல் பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் சென்று பணத்தை வித்டிரா செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளரின் UPI ID யுடன் பல வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால் எந்த கணக்கில் இருந்து பணத்தை பெற வேண்டும் என்கிற ஆப்ஷனும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.