மழையால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – பாடங்களை முடிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்!

0
மழையால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - பாடங்களை முடிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்!
மழையால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - பாடங்களை முடிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்!
மழையால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – பாடங்களை முடிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்!

தமிழகத்தில் ஏற்கனவே பள்ளிகள் காலம் தாழ்த்தி திறக்கப்பட்டுள்ள நிலையில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாடங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

விடுமுறை:

தமிழகத்தில் ஏற்கனவே கூடுதல் வெயில் தாக்கத்தினால் பள்ளி திறப்பு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு கல்வி ஆண்டில் தொடக்க பள்ளி, நடுநிலை மற்றும் இடைநிலை மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு கட்டாயமாக 210 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதனிடையே, பள்ளி திறப்பும் தாமதமான காரணத்தினால் அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதனுடையே தற்போது தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மட்டுமே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

மேலும், தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இந்த விடுமுறையை ஈடுகெட்ட என்ன செய்வது என பள்ளி கல்வித்துறை குழப்பத்தில் இருக்கிறது. மேலும், மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை அவசியமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவே முடியாத அளவுக்கு சாலைகளில் நீர் தேக்கம், மரங்கள் சாய்ந்து விழுவது ஆகியவை நடைபெறுவதால் மாணவர்களுக்கு கட்டாயமாக விடுமுறை அறிவிக்கப்பட வேண்டியதாகி விடுகிறது. இந்நிலையில், மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த பிறகு குறிப்பிட நாட்களில் பாடங்களை நடத்த மற்றும் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!