தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன்.20) நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் – அரசின் புதிய நடவடிக்கை என்ன?
சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெப்பநிலை குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் நிலையில் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 24ஆம் தேதி வரை வங்கக் கடல், அரபிக்கடல் மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி. மீ வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.