பள்ளிகளுக்கு இன்று & நாளை விடுமுறை அறிவிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
மாநிலத்தில் வழக்கத்திற்கும் மாறாக அதிக அளவில் மழை பெய்து வருவதால் சில குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மற்றும் நாளை விடுமுறை என தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை:
இந்தியாவில் தற்போது பருவமழை காலம் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அதி கனமழை பெய்து வருகிறது. மேலும், கனமழையின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மகாராஷ்டிராவில் இடைவிடாத மழைப்பொழிவினால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இடைவிடாத மழைபொழிவினால் 50 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இதனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மஞ்சரா அணையின் நீர்வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், இதுவரைக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 345.9 மிமீ அளவுக்கு மழையின் அளவு பதிவாகியுள்ளது. இதனால், படங்காலி கிராமத்தில் உள்ள மஞ்சரா அணை நிரம்பிவிட்டதால் தடுப்பணையின் இரண்டு கதவுகளும் கடந்த புதன்கிழமை அன்று திறக்கப்பட்டு ஆற்றங்கரையில் வசித்து வரும் மக்களுக்கு மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைபொழிவின் காரணமாக அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட அந்த விடுமுறை நாட்களில் கூட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து வந்தனர். இதனிடையே, தற்போது மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என தலைமை செயல் அதிகாரி அபினவ் கோயல் தெரிவித்துள்ளார்.