SBI வங்கியில் கிளார்க் பதவியில் காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ!
தற்போது SBI வங்கியில் காலியாக இருக்கும் கிளார்க் பணியிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
வங்கி வேலைவாய்ப்பு
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக இருக்கும் கிளார்க் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களால் எதிர்பார்க்கப்படும் SBI வங்கியின் கிளார்க் காலியிட அறிவிப்பு பெரும்பாலும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானதும் விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலும், ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் எஸ்பிஐ எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பட்டப்படிப்பின் இறுதியாண்டு அல்லது செமஸ்டர் தேர்வு எழுதி இருப்பவர்களும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, எஸ்பிஐ எழுத்தர் தேர்வுக்கான வயது வரம்பு 21 முதல் 28 ஆண்டுகள் வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இந்த வயது தளர்வு பொருந்தும்.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் எப்போது சேரலாம்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
இதனுடன் SBI வங்கியின் கிளார்க் பதவிக்கு பொது, OBC, EWS பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும் என்றும் ST, SC மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எஸ்பிஐ கிளார்க் பதவிக்கான தேர்வு, பிரிலிம்ஸ் மற்றும் மெயின் தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதில் பிரிலிம்ஸ் பிரிவில் பகுத்தறிவு திறன், அளவு திறன் மற்றும் ஆங்கில மொழி மற்றும் முதன்மை பாடத்திட்டத்தில் இருந்து ரீசனிங் திறன், அளவு திறன், ஆங்கில மொழி மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.