தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் எப்போது சேரலாம்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளனர். இந்நிலையில், வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் மொத்தமாக 10, 331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இன்னும் பணியிடம் வழங்கப்படாமலே உள்ளது. இதனால் மாணவர்களுக்கு கற்பிக்க பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனால், உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கும்படி பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தாண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆனாலும், ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படுவதற்கு காலதாமதம் ஆகும். இதனால், தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 13,615 பேருக்கு கொரோனா பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்!
அதற்கான விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கானோர் இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.