டிசம்பர் 17 முதல் ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு – தமிழக அரசு அறிவிப்பு!!
டிசம்பர் 17ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு ரேஷன் கார்டுகள் மூலமாக நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ரூ.6000 நிவாரணத்தொகை:
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்கும் தேதி மற்றும் வழங்கும் முறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, டிசம்பர் 17ஆம் தேதி ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்குதலை முதல்வர் அவர்கள் துவங்கி வைக்க இருக்கிறார். இதில் முதற்கட்டமாக, டிசம்பர் 17ஆம் தேதி காலை 50 பேருக்கும், மாலை 50 பேருக்கும் ரேசன் கடைகளின் வாயிலாக நிவாரணத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு – முக்கிய எச்சரிக்கை!!
அடுத்தடுத்த நாட்களில் காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் என ஒரு நாளில் மட்டுமே 200 பேருக்கு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று டோக்கன்களை வழங்க இருக்கிறார்கள். அந்த டோக்கன்களில் நிவாரணத் தொகை வாங்க வேண்டிய நேரம், தேதி ஆகிய விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த டோக்கனில் இருக்கும் தேதியின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுக்கு நிவாரணத் தொகையை கைரேகை பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.