தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு – முக்கிய எச்சரிக்கை!!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த கனமழை டிச.21 ஆம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது.
ரூ.6,000 வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் மதுரை, தஞ்சாவூர், சென்னை, திருச்சி, கடலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3 டிகிரி அளவுக்கு கூடுதல் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் தமிழக கடலோர பகுதி, வங்கக்கடல் பகுதி, வங்காள வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.