ரூ.6,000 வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
ரூ.6,000 வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரூ.6,000 வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரூ.6,000 வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகை வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகை ரூபாய் 6000 வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் டிசம்பர் 17ஆம் தேதி அன்று வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் வெள்ள நிவாரணத் தொகை ரூபாய் 6 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தக் கோரியும், நிவாரணத் தொகையை அதிகரிக்க அரசுக்கு உத்தரவளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

ரேஷன் கார்டு இல்லையா? ரூ.6000 நிவாரணம் பெற உடனே இதை பண்ணுங்க!!

இந்த வழக்கு விசாரணையில் வெள்ள நிவாரண தொகை ரூபாய் 6 ஆயிரத்தை அரசு ரொக்கமாக வழங்கலாம். நிவாரணம் என்பது உடனடி தேவையாகும். இதனை தாமதிக்க கூடாது. வெள்ள நிவாரண தொகையை தகுதியானவர்கள் பெற்றுக் கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிவாரண தொகையை ஐந்து நாட்களில் கொடுத்து முடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!