புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,500 நிவாரணத்தொகை – அரசின் சூப்பர் அறிவிப்பு!
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ரூபாய் 2500 வெள்ள நிவாரணத் தொகையாக வழங்க உள்ளதாக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வெள்ள நிவாரணத் தொகை:
டிசம்பர் 2ம் தேதி வாக்கில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது அதிதீவிர புயலாக உருவாகியது. இதற்கு மிக்ஜாம் என்ற பெயரிட்டனர். வட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் 10 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் வகையில் அதிக அளவில் இழப்புகள் பதிவு செய்யப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
பெண்களின் திருமண வயது உயர்வு? மாநில அரசின் புதிய திட்டம்!
அப்போது செய்தியாளர்களிடம், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உடனடியாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூபாய் 2500 வெள்ள நிவாரண தொகையாக அரசு உடனடியாக வழங்க உள்ளதாகவும், நிலைமை சீராகும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வழிகளிலும் அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.