மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – காத்திருக்கும் புத்தாண்டு பரிசு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஒரே நேரத்தில் அகவிலைப்படி உயர்வு மற்றும் 8வது ஊதிய குழுவின் பலன் கிடைக்கவுள்ளது.
புத்தாண்டு பரிசு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படியாக 4% உயர்வு வழங்கப்பட்டது. இதன் பின்னர், தற்போது ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஜனவரி மாதத்திற்காக அகவிலைப்படி வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களின் திருமண வயது உயர்வு? மாநில அரசின் புதிய திட்டம்!
மேலும், வழக்கம் போல ஜனவரி மாதத்திலும் 4% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு ஜாக்பாட்டாக மற்றொரு பரிசும் கிடைக்க இருக்கிறது. அதாவது, இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.26,000 வரையிலும் சம்பளம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.