ரூ.1000 உரிமைத்தொகைக்கு 3 லட்சம் அரசு ஊழியர்கள் விண்ணப்பம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படாது என அறிவித்தும் 3 லட்சம் அரசு ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் வரும் செப்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1.06 கோடி குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் காரணமாக 2 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் மக்கள் – கேரளாவில் பரபரப்பு!
மேலும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், சொந்த கார் மற்றும் 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப தலைவிகளும் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்து விண்ணப்பங்கள் உரிமைத்தொகைக்கான நிபந்தனைக்கு உட்படாத பட்சத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.