நிபா வைரஸ் காரணமாக 2 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் மக்கள் – கேரளாவில் பரபரப்பு!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் இன்று (செப்.12) உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
நிபா வைரஸ்:
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் மக்கள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும், செப் 11 ஆம் தேதி ஒருவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அது மட்டுமில்லாமல் உயிரிழந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்களில் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.
டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் GST வரி விதிப்பு – மத்திய அரசின் திட்டம்!
அதனால் நிபா வைரஸ் காரணமாக தான் நிகழ்ந்ததா என்பதை உறுதி செய்ய உயிரிழந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.