டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் GST வரி விதிப்பு – மத்திய அரசின் திட்டம்!
நாட்டில் டீசல் வாகனங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அவற்றிருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு:
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டீசல் வாகனங்களுக்கான உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டு அனைத்துமே எலக்ட்ரிக் வாகனங்களாக பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. டீசல் வாகன பயன்பாட்டின் காரணமாக அதிக அளவிலான டீசல் தேவை ஏற்படுகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
இதை குறைக்கவும் மாசை குறைக்கவும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மத்திய அரசு ஆதரித்து வருகிறது. அந்த வகையில் டீசல் வாகனங்களுக்கு மாசு உற்பத்தி வரியாக 10 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? தீவிர எதிர்பார்ப்பில் தேர்வாளர்கள்!!
மேலும் விரைவில் டீசல் வாகனங்களை தவிர்த்து விட்டு EV வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மேலும் வரி விதிப்புகள் அதிகமாகும் என்று கார் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ஊடகங்களில் வெளியான தகவலை மறுத்துள்ளார். மத்திய அரசு டீசல் வாகனங்களுக்கான கூடுதல் வரி விதிப்பு குறித்து தீவிர ஆலோசனை எதனையும் மேற்கொள்ளவில்லை. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையிலான எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறிக் கொள்வது எதிர்காலதிற்கான சிறந்த ஒன்றாக இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.