TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? தீவிர எதிர்பார்ப்பில் தேர்வாளர்கள்!!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? தீவிர எதிர்பார்ப்பில் தேர்வாளர்கள்!!
TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? தீவிர எதிர்பார்ப்பில் தேர்வாளர்கள்!!
TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? தீவிர எதிர்பார்ப்பில் தேர்வாளர்கள்!!

தமிழகத்தில் குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் தற்போது வரை வெளியாகாத நிலையில் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடும்படி தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி குரூப் 2, 2A தேர்வு நடைபெற்றது. நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், தேர்வு முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. மேலும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வரை வெளியிடாமல் இருந்து வருகிறது.

இதனிடையே, தேர்வெழுதிய 57,093 பேரும் தேர்வு முடிவுகளுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். எனவே, உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்தி குரூப் 2, 2A தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Call us at 8101234234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!