பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அடுத்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதை பஞ்சாப் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் TER is JAB என்று பதிவிட்டு அவரது புகைப்படத்தை இணைத்துள்ளது.
TER is JAB! ♥️
Official Statement
Ricky Ponting joins Punjab Kings as the new Head Coach! #RickyPonting #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/DS9iAHDAu7— Punjab Kings (@PunjabKingsIPL) September 18, 2024
IND vs BAN 2024: இந்த 4 வீரர்கள் தான் BEST.. போட்டிக்கு முன் கௌதம் கம்பீர் முக்கிய கருத்து!!
இவர் நான்கு ஆண்டு காலம் தலைமைப் பயிற்சியாளராக தொடர பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. இந்த முறை ரிக்கி பாண்டிங் தலைமையில் அந்த அணி கோப்பையை வெல்லும் என பஞ்சாப் அணி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


























