64 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை திட்டத்திற்கு முன்வந்து மறுப்பு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை 64 லட்சம் பெண்கள் முன்வந்து மறுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை:
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் மாதத்தில் இத்திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரன் ரூ.44,120க்கு விற்பனை!!
இந்நிலையில் இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி மேல்முறையீடு செய்ய தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கட்டாயம் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வசதி வாய்ப்புடன் இருப்பதால் 64 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகையை வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.