அக்.1 முதல் வங்கி கடன்களுக்கு புதிய விதிகள் அமல் – RBI வழிகாட்டுதல்கள்!

0
அக்.1 முதல் வங்கி கடன்களுக்கு புதிய விதிகள் அமல் - RBI வழிகாட்டுதல்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது நாட்டில் வங்கிகளுக்கான கடன் வாங்கும் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

வங்கி கடன்கள்:

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கி கடன்கள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதன் பின்னர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வங்கிகள் மற்றும் என் பி எஸ் சி களுக்கான சில்லறை மற்றும் எம்எஸ்எம்இ கடன்களுக்கான விதிகளில் மாற்றுதல்கள் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின் படி கடன் வாங்கும் நபர் வட்டி மற்றும் இதர செலவுகள் உட்பட கடன் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

TNTET தேர்வு எழுத போறீங்களா? அப்போ கண்டிப்பா இது உங்களுக்கு தான்!

மேலும் வணிக வங்கிகள் கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் கடன் ஒப்பந்தங்கள் ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் யூனிட்களின் டிஜிட்டல் கடன்கள் மற்றும் சிறிய தொகை கடன்கள் குறித்தான அனைத்து விவரங்களையும் வழங்க கட்டாயம் ஆக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் அனைத்து நிதி நிறுவனங்களின் தயாரிப்புகள் தொடர்பான வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும், கடன்கள் தொடர்பான முழு விவரங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!