மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளமான x தளத்தில் புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து எலான் மாஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
x தளம்
உலகளவில் மக்கள் பலர் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக புது புது மாற்றங்களை சமூக வலைதள செயலிகள் வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் x தளம் எலான் மாஸ்க் கட்டுப்பாட்டில் வந்தது முதல் பல மாற்றங்களை கண்டுள்ளது. அதாவது வெரிபை டிக் வாங்க கூட பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்.1 முதல் வங்கி கடன்களுக்கு புதிய விதிகள் அமல் – RBI வழிகாட்டுதல்கள்!
அதனால் பலர் x தளத்தை விட்டு சென்றனர். இந்நிலையில் தற்போது x தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட மற்றவர்களின் பதிவுகளுக்கு பதிலளிக்க, லைக் மற்றும் புக்மார்க் செய்ய கட்டணம் வசூலிக்க இருப்பதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை போலி கணக்குகளை கட்டுப்படுத்தவே எடுக்கப்பட்டு இருப்பதாகவும், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸில் தற்போது நடைமுறையில் உள்ள இந்த கட்டண வசூல் விரைவில் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.