தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவை – இணையதள சிக்கல்!!

0
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவை - இணையதள சிக்கல்!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்தில் அரசு அறிவித்தது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஏப்ரல் மாத சம்பளத்தில் கிடைக்கும் என்றும், ஜனவரி முதல் மார்ச் மாதங்களுக்கான நிலுவைத் தொகை ஏப்ரல் மாத ஊதியத்துடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தொகையானது களஞ்சியம் என்ற இணையதளத்தின் வழியாகவே வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை ‘கால் வெப் ஐ பி’ என்ற ஐடியில் தான் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x தளத்தில் புதிய மாற்றம்.. இனி எல்லாமே காசு தான் – ஷாக்கில் பயனர்கள்!

ஆனால் இந்த இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. பலரது நிலுவை தொகைகள் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படாமலும், ஒரு சிலருக்கு இரண்டு முறைகள் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சிக்கல்கள் காரணமாக பணி நிறைவு பெறாததால் ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு வழங்கியும் ஏப்ரல் மாதத்தில் அதனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!