நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன்கள், உடைகள், உண்ணும் உணவுப் பொருட்கள் முதல் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெய் வரை 90%-க்கும் அதிகமான உலக வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. இந்த உலகப் பொருளாதாரச் சக்கரத்தை ஓயாமல் இயக்கும் கடல் மாலுமிகள் மற்றும் கப்பல் ஊழியர்களைக் கௌரவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதி சர்வதேச கடற்படையினர் தினம் (Day of the Seafarer) உலகளவில் கொண்டாடப்படுகிறது.
ஏன் ஜூன் 25 அன்று கொண்டாடப்படுகிறது?
சர்வதேச கடல்சார் அமைப்பால் (IMO – International Maritime Organization) 2010-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடைபெற்ற மாநாட்டில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்குப் பங்காற்றும் கப்பல் ஊழியர்களின் உழைப்பை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக, ஜூன் 25-ம் தேதியை அதிகாரப்பூர்வமாக சர்வதேச கடற்படையினர் தினமாக IMO அறிவித்தது. 2011-ம் ஆண்டிலிருந்து இத்தினம் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாலுமிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
(Challenges of Seafarers)
ஒரு மாலுமியின் வாழ்க்கை பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய தியாகங்களும் சவால்களும் ஒளிந்துள்ளன:
-
- நெடிய தனிமை:
குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பிரிந்து 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நடுக்கடலிலேயே வாழ வேண்டிய சூழல் இவர்களுக்குக் கிடைக்கிறது. - இயற்கைச் சீற்றங்கள்:
கடலில் திடீரென ஏற்படும் அசுரப் புயல்கள், ஆளுயர அலைகள் மற்றும் மோசமான வானிலையைக் கடந்துதான் இவர்கள் கப்பலைச் செலுத்த வேண்டும். - கடல் கொள்ளையர்கள் (Piracy):
இன்றும் ஏடன் வளைகுடா, செங்கடல் போன்ற சில முக்கியக் கடல் வழித்தடங்களில் சோமாலியக் கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களுக்கு இடையேதான் மாலுமிகள் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்கிறார்கள்.
- நெடிய தனிமை:
கோவிட் பெருந்தொற்று போன்ற ஒட்டுமொத்த உலகமே முடங்கிய இக்கட்டான காலக்கட்டங்களிலும், உலகப் நாடுகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் தங்கு தடையின்றி கொண்டு சேர்த்தவர்கள் இந்த மாலுமிகள் தான். இந்த ஜூன் 25-ல், உலக வர்த்தகத்தின் நிஜ ஹீரோக்களான கடற்படையினருக்கு நமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்போம்.



























