கோபிக்கு ஆதரவாக பேசும் ராதிகாவின் அண்ணன், பதிலடி கொடுத்த பாக்கியா – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் உறவை பற்றி பாக்கியாவிற்கு தெரிந்துவிட்ட நிலையில், ராதிகா வீட்டிற்கு சென்று பாக்கியா நியாயம் கேட்கிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் கோபிக்கு ஆதரவாக பேச அதை கேட்டு பாக்கியாவிற்கு கோவம் வருகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கதையில் பெரிய திருப்பமாக கோபி இத்தனை நாள் சொன்ன பொய் எல்லாம் வெளியே தெரிந்துள்ளது. ராதிகா கோபியின் உறவை தெரிந்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். ராதிகா வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட பாக்கியாவிற்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்ததால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர் இனிமேல் கோபி உடன் வாழமாட்டேன் என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் குடும்பத்தில் அனைவரும் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர். கோபி தான் செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறார். இதற்கிடையே வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா தன்னுடைய அலுவலகத்தில் தஞ்சம் அடைகிறார். அங்கே அவருக்கு துணையாக செல்வியும் எழிலும் இருக்கின்றனர். பாக்கியா எந்த முடிவை எடுத்தாலும் தான் துணையாக இருப்பேன் என பாக்கியா சொல்கிறார். இந்நிலையில் ராதிகாவிடம் நியாயத்தை கேட்க வேண்டும் என செல்வி உடன் பாக்கியா கிளம்புகிறார்.
நம்பிக்கை துரோகம் செய்த ராதிகா, கேள்வி கேட்ட பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
நேராக பாக்கியா வீட்டிற்கு சென்று நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என சொல்கிறார். பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிந்ததை நினைத்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். ஆனால் ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் ராதிகா கோபியை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறார்கள். அதனால் பாக்கியாவிற்கு கோவம் வருகிறது. ராதிகாவின் அண்ணனிடம் சரமாரியாக கேள்வி கேட்க அவரால் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.