நம்பிக்கை துரோகம் செய்த ராதிகா, கேள்வி கேட்ட பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிந்த பின் நேராக ராதிகாவை பார்க்க அவருடைய வீட்டிற்கு செல்கிறார். ராதிகா கோபி தான் உங்க கணவர் என்ற உண்மை தெரியாது என சொல்ல அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பெரிய உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தை விட்டுவிட்டு கோபி வீட்டை விட்டு வெளியேறி செல்ல முடிவு செய்கிறார். இந்த விஷயம் எழில் மற்றும் தாத்தாவிற்கு தெரிந்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது என்பதால் அவர்கள் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். கோபியின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாக அதனால் பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.
Exams Daily Mobile App Download
ஆனால் அது பற்றி பாக்கியா கேட்காமல் இருக்கிறார். இந்நிலையில் கோபிக்கு விபத்து ஏற்பட பாக்கியா அவரை சந்திக்க செல்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகாவும் வர பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிய வருகிறது. ராதிகா மற்றும் கோபியின் உறவை தெரிந்து மிகுந்த வேதனை அடைகிறார் பாக்கியா. இதற்கிடையே பாக்கியா குடும்பத்தினர் முன்னிலையில் கோபியை பற்றி பல கேள்விகளை கேட்கிறார். அதனால் குடும்பத்திற்கு எல்லா உண்மையும் தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.
விவாகரத்து பற்றி முதன்முறையாக மனம் திறந்த நடிகை ரட்சிதா கணவர் தினேஷ் – காரணம் இதுவா?
இனிமேல் கோபி உடன் வாழ மாட்டேன் என பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அடுத்து வரும் எபிசோடில் பாக்கியா செல்வியுடன் சேர்ந்து ராதிகாவை பார்க்க செல்கிறார். ராதிகாவிடம் நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என சொல்ல, இல்லை டீச்சர் என ராதிகா சொல்கிறார். செல்வி, அக்காவிற்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என சொல்ல, அவர் எனக்கு செய்தது துரோகம் என்றால் நீங்க எனக்கு செய்தது என்ன என கேட்கிறார். சத்தியமாக கோபி உங்க கணவர் என எனக்கு தெரியாது என ராதிகா அழுகிறார். நான் உங்க மீது வைத்த அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நீங்க நிறைய நல்ல விஷயம் செய்துவிட்டீர்கள் ராதிகா என பாக்கியா சொல்கிறார். நான் தெரிந்தே உங்க வாழ்க்கைக்குள் வரவில்லை கோபி உங்க கணவர் என எனக்கு தெரியாது என ராதிகா அழுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.