ஏப்ரல் 27ம் தேதி பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் மாநிலத்தில் நாளை பஞ்சாப் மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் கடந்த சில தினங்களாக மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனை அடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
RBI Grade B அறிவிப்பு 2023 – 291 காலிப்பணியிடங்கள், ஊதியம் & முழு விவரங்களுடன்!
இவர் 5 முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். தற்போது 95 வயதாகும் இவர் திடீரென உயிரிழந்தது அரசியல் தலைவர்கள் ஆதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மற்றும் மாநில முதல்வர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவரது மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை (ஏப். 27) பஞ்சாப் மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.