தமிழகத்தில் 9வது மாணவர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் – தேர்ச்சி பெற இது கட்டாயம்!

0
தமிழகத்தில் 9வது மாணவர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் – தேர்ச்சி பெற இது கட்டாயம்!

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர் தேர்ச்சி

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் பத்தாம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று குறைகிறது. இதன் காரணமாக 9 ஆம் வகுப்பில் மாணவர்களை தேர்ச்சி செய்வதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27ம் தேதி பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அதாவது, ஒன்பதாம் வகுப்பில் ஒரு மாணவனை தேர்ச்சி அடைய செய்வதற்கு அந்த மாணவன் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சமாக 25 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும், உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து குறைந்தது 150 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும், கட்டாயமாக அந்த மாணவருக்கு 75%க்கும் அதிகமான வருகைப்பதிவு இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர் இறுதி தேர்வில் ஒரு பாடத்திலோ அல்லது அனைத்து பாடத் தேர்விற்கோ வரவில்லை எனில், அந்த மாணவர் அதற்கான மருத்துவ சான்றிதழ் ஒப்படைத்தால் காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்ணை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். இந்த மேற்குறிப்பிட்ட விதிகளுக்கும் ஒரு மாணவன் உட்படவில்லை எனில், அந்த மாணவரை தேர்ச்சி பெற செய்ய முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!