ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சிக்கல்கள் – தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை!
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரூ. 9000 கோடிக்கு மேல் செலவாகும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்:
இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்தும், அதற்கான செலவுகள் குறித்தும் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இந்த திட்டத்திற்காக கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை வாங்க ரூ.9,309 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
மேலும் இந்த திட்டத்திற்காக கூடுதலாக வழங்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க இட வசதி மற்றும் பாதுகாவலர் தேவை என்பதால், அதனால் கூடுதல் சுமை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களை தனித்தனியாக நடத்தினால் தேர்தல் பணிக்கான ஊழியர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் எனவும் இரு தேர்தல்களையும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தும் பட்சத்தில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் சிக்கல்கள் ஏற்படலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.