தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கனமழை:
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே கன மழை பெய்து வருகிறது. மேலும், ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர்.
ONGC ஆணையத்தில் ரூ.9,000/- உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்நிலையில், தென்னிந்தியாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய தென் இந்தியாவில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த ஐந்து நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.