வங்கி கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான ஷாக் அறிவிப்பு – வட்டி விகிதம் திடீர் உயர்வு!
கார் கடன், கல்வி கடன், தனிநபர் மற்றும் வீட்டுக் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி உயர்வு:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் பண வீக்கத்தை பொறுத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது குறிப்பிட சில வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. அதாவது, வட்டி வீதத்தை அதிகரித்தது கார் கடன், கல்வி கடன், தனிநபர் மற்றும் வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி பண வீக்கம் காரணமாக MCLR விகிதத்தை ஐந்து அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சிக்கல்கள் – தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை!
மேலும், இந்த புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஐசிஐசிஐ வங்கியில் MCLR விகிதம் 8.40 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாத MCLR 8.50 சதவீதமாகவும், மூன்று மாத MCLR 8.85% ஆகவும், ஒரு வருடத்திற்கு 8.95 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதே போல, பஞ்சாப் நேஷனல் வங்கியில் MCLR விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாத MCLR 8.25 சதவீதமாகவும், மூன்று மாத MCLR 8.35 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இஎம்ஐ செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டியுள்ளது.