மார்ச்.3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆனது மார்ச் மூன்றாம் தேதி அன்று சொட்டு மருந்து வழங்க உள்ளது குறித்து தெரிவித்துள்ளது.
சொட்டு மருந்து முகாம்:
நாடு முழுவதும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, தான் தற்போது பெரும்பாலான ஆட்கொல்லி நோய்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு பிறந்த குழந்தைகள் முதல் குறிப்பிட்ட வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நடத்த உள்ளதாக மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது குறித்த அறிக்கை ஒன்றையும வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதால் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட தேதியில் சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.