ரேஷன் பொருட்கள் வாங்குவதில் புதிய சிக்கல் – உணவு வழங்கல் துறை அதிரடி உத்தரவு!!
இனி ரேஷன் பொருட்களை இப்படி மட்டுமே பெற வேண்டும் என உணவு வழங்கல் துறை அதிரடியாக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு பயன் தரும் விதமாக ஒவ்வொரு மாநிலத் தரப்பிலிருந்தும் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டுகள் மூலமாகவே உணவு தானியங்கள் மற்றும் அரசின் சலுகைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் ரேஷன் கார்டு பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தகுதியுள்ள பொதுமக்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என அரசுகள் முடிவெடுத்துள்ளனர்.
அந்த வகையில், மாநில அரசு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் பயனாளிகள் தகுதியற்றவர்கள் எனக் கூறி அவர்களின் ரேஷன் கார்டு உரிமையை ரத்து செய்துள்ளது. மேலும், பல தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அரசு முக்கிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தகுதி இல்லாத ரேஷன் கார்டுதாரர்களை அடையாளம் காணும் விதமாக ரேஷன் யூனிட் சரி பார்ப்பதற்கான ஆயத்த பணிகளை உணவு வழங்கல் துறை தற்போது துவங்கியுள்ளது.
அதாவது, ஒரு குடும்பத்தில் ரேஷன் வாங்கும் போது அவர்களின் கட்டைவிரல் பதிவு செய்த பின்னர் பொருட்கள் வழங்கப்படும். அதன் பின்னர் மீண்டும் ரேஷன் பொருட்கள் வாங்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள வேறு ஒரு உறுப்பினர் தான் கட்டைவிரலை பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற வேண்டும். இதே போல, அடுத்தடுத்த உறுப்பினர்கள் வந்து ரேஷன் பொருட்கள் வாங்கும் பட்சத்தில் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என வழங்கல் துறை அறிவித்துள்ளது.