மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – ஆண்டுக்கு இருமுறை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டம்!
சமீபத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, NCERT அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஆண்டுக்கு ஒரே ஒரு பொதுத்தேர்வு என்ற முறையை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Wipro நிறுவனத்தில் உங்களுக்கான வேலை இதோ!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 10ம் வகுப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


























