நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் பாதிப்பு – அரசின் நடவடிக்கை என்ன?
நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் நிலவிவரும் நிலையில் அரசியல் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சியின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு:
ஒவ்வொரு மாதமும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தின் காரணத்தினால் பொதுமக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியினரை அவ்வப்போது தாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல, சில கட்சிகள் சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதிகளை வழங்கி விட்டு ஆட்சியின் போது எந்தவித நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்குவதில்லை. அவர்களின் கூற்றுக்கு முரணாக சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு – முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மற்றும் மானிய உணவு தானியங்களால் பயனடைந்து வருகின்றனர். விலைவாசி உயர்வால் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படும் பொருட்களால் அவர்களுக்கு மிகப்பெரிய நன்மை ஏற்படுகிறது. இதுகுறித்து நேற்று புது டெல்லி லோக்சபாவில் விவாதங்கள் நடைபெற்றது. அதாவது எதிர்க்கட்சியினரை தாக்குவதற்கு பதிலாக விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் படியான நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.