மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு – முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு திட்டங்கள்
இந்தியாவில் மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு குறித்து விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மத்திய கல்வி இணையமைச்சர் சுபாஷ் சர்கார் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில் மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் 2019ன் படி பல்கலைக்கழகங்களை ஒரே அலகாக கொண்டே பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தீவிரம் – அமைச்சர் அறிவிப்பு!!
இதில் சில அட்டவணைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் சில விதிவிலக்குகள் பெற்ற நிறுவனங்களை தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால் தற்போது வரை ஓபிசி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசால் எதுவும் திட்டமிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.