வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவை சந்தித்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவிற்கு கோபி மற்றும் ராதிகா பற்றிய எல்லா உண்மையும் தெரிய வர குடும்பத்தில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் உண்மையை சொல்லிவிடுகிறார். இந்நிலையில் அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் அவர் ராதிகாவை சந்திக்க இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு விபத்து ஏற்பட்டதால் அங்கே ராதிகா வர கோபி பற்றிய உண்மை எல்லாம் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. மேலும் ராதிகா தான் கோபி உடன் பழகிய பெண் என்ற உண்மையை தெரிந்து கொண்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் அவர் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் கோபி நிற்கிறார். இவ்வளவு நடந்த பின் கூட ஈஸ்வரி கோபியை தான் நம்பிக் கொண்டே இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
கோபியின் இந்த விஷயம் மட்டுமல்லாமல் பாக்கியாவை அவர் விவாகரத்து செய்ய நினைத்தது கூட பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இது பற்றி பாக்கியா சொல்ல ஈஸ்வரி அப்படி எல்லாம் இருக்காது என சொல்கிறார். ஆனால் அந்த நேரம் பார்த்து தபால்காரர் வந்து போஸ்ட் ஒன்றை கொடுக்கிறார். அது கோபி பெயரில் வந்திருப்பதாக சொல்ல, கோபி அதை வாங்கி பார்க்கிறார். அது கோர்ட்டில் இருந்து வந்த விவாகரத்து பத்திரம் என தெரிந்து பாக்கியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாக்கியாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினர், அதிர்ச்சியில் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!
அதனால் பாக்கியா அந்த வீட்டை விட்டு வெளியே போக முடிவு செய்கிறார். வெளியே சென்ற பாக்கியா ராதிகாவை சந்திக்க இருக்கிறார். பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிந்தது தெரியாமல் ராதிகா மீண்டும் பொய் பேச ராதிகாவிடமும் கோவப்பட்ட பாக்கியா எனக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என சொல்கிறார். அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் பாக்கியாவின் கோவமான காட்சிகள் வர இருக்கிறது.