ஊட்டி மலை ரயில் திடீர் விபத்து – சேவைகள் பாதிப்பு!
ஊட்டி மலை ரயில் பயணிகளுடன் சென்ற பொது திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
ரயில் விபத்து:
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டு, கிட்டத்தட்ட 290 பேர்களுக்கு மேல் உயிரிழந்தும், 1000 பேர்களுக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் முழுவதுமாக மீளவில்லை.
ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய ஒரு வாரமே அவகாசம்.. ஜூன் 14 கடைசி நாள்! – உடனே முந்துங்கள்!
இந்நிலையில், தற்போது திடீரென்று ஊட்டி மலை ரயில் பயணிகளுடன் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்தை நோக்கி சென்றது. அப்போது, 2 பெட்டிக்குள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.