ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய ஒரு வாரமே அவகாசம்.. ஜூன் 14 கடைசி நாள்! – உடனே முந்துங்கள்!
இந்தியாவில் மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய காலக்கெடு ஜூன் 14 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு
நாடு முழுவதும் மக்களுக்கு முக்கியமான அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்நிலையில் வெறும் அடையாள அட்டை மட்டுமல்லாமல் பண பரிவர்தனைகளுக்கும், சிலிண்டர் இணைப்பு, ரேஷன் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் ஆகும். அதனால் ஆதாரில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதனை செய்வது எளிமையான ஒன்று தான். இருந்தாலும் மொபைல் எண்ணை மாற்ற ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் ஆதார் சேவை மையத்தில் சில அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும். பெரும்பாலான மாற்றங்களுக்கு ரூ. 50 கட்டணம் வசூல் செய்யப்படும். அதனால் ஆதார் அமைப்பு இலவசமாக அப்டேட் செய்ய ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – Online ல் விண்ணப்பிக்கலாம் வாங்க!
மேலும் அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மார்ச் 15 முதல் ஜூன் 14 வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் உடனே செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.