TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான அறிவிப்பு – விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக நிரப்படும். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
தேர்வு வாரியம் அறிவிப்பு:
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் இந்த தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II அறிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. இதுவரை அறிவிப்பு வெளியாகி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும், தாள் IIக்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை செய்ய வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!
அதன் படி விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது. அதனால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I/IIக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 – 16.07.2022 வரை திருந்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.