வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா தொற்று – விரைவில் ஊரடங்கு அமல்!
எரிஸ் வகை புதிய கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா:
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா தொற்று மூன்று அலைகளைத் தாண்டி தற்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா ஓமைக்கிரான் வைரஸிலிருந்து எரிஸ் வகை தொற்று இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, உலக மக்களை பாதுகாப்புடன் இருக்கும் படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் 13,000 காலிப்பணியிடங்கள் – கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு!
இந்த எரிஸ் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டைப்புண் முதலான அறிகுறிகள் தென்படும் எனவும், 75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களையே இந்த எரிஸ் தொற்று அதிக அளவில் பாதிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாறிவரும் காலநிலை ஆகியவற்றால் இந்த தொற்று வழக்கத்தை காட்டிலும் அதிவேகமாக பரவி வருவதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், எரிஸ் வகை கொரோனா தொற்று அதிகமாகும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.