மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் 13,000 காலிப்பணியிடங்கள் – கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் 10 மாதங்களுக்குள் நிரப்பப்படும் என கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் நிரப்புதல்
இந்தியாவில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை வேலையில் சேர்க்க வேண்டும் என பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த ஜூன் மாதம் உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என தெரிவித்தார்.
SBI SCO தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
அதனை தொடர்ந்து தற்போது கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் 10 மாதங்களுக்குள் 13,000 காலியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் கல்வி நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் மாணவர்களுக்கும் கல்வி மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.