தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்து ரத்து? விரைவில் புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்து ரத்து? விரைவில் புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்து ரத்து? விரைவில் புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்து ரத்து? விரைவில் புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் தொற்று பரவியதை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அண்டை மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்தை முடக்க அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து ரத்து:

நாடு முழுவதும் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஜன.6ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம் மற்றும் மருத்துவம் சார்ந்த அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

இவ்வாறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்த பிறகும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,000 வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவுநேர ஊரடங்கின் போது அண்டை மாநிலங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து இயங்குவதாகவும், அப்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மூலமும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் HRA மேலும் 3% உயர்வு – விரைவில் அறிவிப்பு!

ஏனெனில் தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அண்டை மாநிலங்களுக்கு இடையில் பொது போக்குவரத்தை தடை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டால் கொரோனா தொற்று பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!