10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே போஸ்ட் ஆபீஸ் அலுவலக வேலைகளில் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் முழு ஊரடங்கு காரணமாக முடக்கபட்டது. இதனால் பலர் வேலை இன்றி தவித்தனர். இந்த வகையில் தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்த வகையில் தமிழக தபால் நிலையம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் தபால் அலுவலக வேலைக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- நிறுவனத்தின் பெயர் – Tamilnadu Postal Circle
- பணியின் பெயர் – அஞ்சல் வட்டம் முகவர்கள் (Agent ) மற்றும் கள அதிகாரி (Field Officer)
- நேர்காணல் முறை (Walk-in-Interview) முறை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.01.2022
- குறைந்தபட்ச கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு – 18 முதல் 50 வயதுக்குள்.
இந்த அஞ்சல் அலுவலக முகவர் மற்றும் கள அலுவலர் விண்ணப்ப படிவம் அனைத்து கோயம்புத்தூர் தபால் நிலையங்களில் 18.01.2022 முதல் 28.01.2022 வரை கிடைக்கும். எனவே விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் இருந்து சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பெறலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை அனுப்பி பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.