தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து - அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து - அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் வரும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு பொது மக்கள் தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து விட்டது என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவர் மூலம் இத்தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று டெல்டா வகை வைரஸ் போல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Post Office இல் மாதம் ரூ.1411 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

அந்த வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்தார். அதன் பிறகு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 6ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2 முறை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இதனை பொதுமக்களும் வரவேற்றுள்ளனர். ஞாயிறு ஊரடங்கு என்பதால் முன்தினம் வரும் சனிக்கிழமை, அதனை தொடர்ந்து திங்கள் கிழமை அன்றும் பொருட்கள் வாங்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் கொரோனா தொற்று விரைவாக பரவும் அபாயம் ஏற்படும். அதனால் ஞாயிற்று கிழமை ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்டம் வர்த்தக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!