மத்திய அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் HRA மேலும் 3% உயர்வு – விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசின் ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படும் அகவிலைப்படியினால் அதனுடன் தொடர்புடைய மற்ற படிகளும் உயர்த்தப்படுகிறது. விரைவில் ஜனவரி 2022க்கான DA உயர்த்தப்பட இருப்பதால் வீட்டு வாடகை படியானது மேலும் 3% அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டு வாடகை படி:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது இறுதியாக 2021 ஜூலை 1 முதல் 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படையானது நவம்பர் மாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போதைய 2022 ஜனவரி 1 முதலான தவணைக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. 7 வது ஊதியக்குழுவின் தகவலின் படி தற்போதைய DA உயர்வு மேலும் 3% அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.இதனால் மத்திய அரசின் ஊழியர்கள் மொத்தம் 34% அகவிலைப்படி பெறுவார்கள்.
Airbus நிறுவனத்தில் 6,000 புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
7 வது ஊதியக்குழுவின் விதிகளின் படி அகவிலைப்படையானது 25% க்கு மேல் அதிகமாகும் போது ஊழியர்களின் வீட்டு வாடகை படி அதிகரிக்கப்படும். DA உடன் தொடர்புடைய வீட்டு வாடகை படியும் தற்போது செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளது. வீட்டு வாடகை படியானது ஊழியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படும். 50லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் X வகை என்றும், 5 லட்சத்திற்கு அதிகம் உள்ள நகரம் Y வகை என்றும் மக்கள் Z வகை நகரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – சத்துணவு வழங்க அரசாணை வெளியீடு!
X, Y மற்றும் Z என்று வகைப்படுத்தப்பட்ட நகரங்களுக்கு முறையே அடிப்படை ஊதியத்தில் 27%, 18% மற்றும் 9% ஆகும். அடுத்த முறை அகவிலைப்படியில் உயர்வு இருக்கும் போது வீட்டு வடக்கை படியானது 30 சதவீதமாக அதிகரிக்கப்படும், ஆனால் டிஏ 50 சதவீதத்தை தாண்டும் போது மட்டுமே இந்த உயர்வு அளிக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது. அரசின் அளித்துள்ள குறிப்புகளின் படி அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும்போது வீட்டு வாடகை படி முறையே 30, 20 மற்றும் 10 சதவீதமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.