தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – சத்துணவு வழங்க அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு:
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்றாம் அலை கொரோனா பரவல் தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ நெருங்கி விட்டது. இதனையடுத்து முதல்வர் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன் படி தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் இரவு 10 மணி வரை காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை இல்லம் தேடி கல்வி திட்டம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!
இந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி முதல் கட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதால் அம்மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய U19 கேப்டன் யாஷ் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து உணவு வழங்க வேண்டும். நடப்பு ஜனவரி மாதத்திற்கான மொத்த பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு அதற்குரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டு நோயை ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.