பாக்கியாவிடம் வசமாக சிக்கும் கோபி, அடுத்தகட்ட முடிவு என்ன? சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி நடந்து கொள்வதை எல்லாம் பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. ராதிகாவின் அம்மாவும் விவாகரத்து வாங்க சொல்லி கொண்டே இருப்பதால் கோபியின் அடுத்தக்கட்ட முடிவு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல்:
சாதாரண குடும்பத்தில் இருக்கும் இல்லத்தரசிகளின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. இதில் முக்கிய கதாபாத்திரமாக பாக்கியா மற்றும் அவரது கணவர் கோபி இருக்கிறார். பாக்கியா படிக்காத பெண்ணாக இருந்தாலும் சுய தொழில் செய்து முன்னேறி வருகிறார். ஆனால் கோபி ராதிகாவை மட்டம் தட்டிக் கொண்டே இருக்க கல்லூரி காதலி ராதிகாவை சந்திக்கிறார். ராதிகாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என வாக்கு கொடுத்து இருக்கிறார். கோபி ராதிகாவிடம் பழகும் விஷயம் கோபியின் தந்தைக்கு தெரிய வருகிறது.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரியவில்லை – இயக்குனர் கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!
அதுமட்டுமின்றி எழிலிற்கும் இது பற்றி தெரிந்துள்ளது. ஆனால் குடும்பம் பிரிய கூடாது என்பதற்காக இருவரும் அமைதியாக இருக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் கிராமத்திற்கு பொங்கல் பண்டிகைக்கு செல்ல அங்கே கோபி எந்த நேரமும் போனில் இருப்பதை பார்த்து பாக்கியா சந்தேகப்படுகிறார். மேலும் வீட்டிற்கு வந்ததும் ரெஸ்ட் எடுக்காமல் அலுவலக வேலை இருப்பதாக கிளம்ப ராதிகாவிடம் கொஞ்சி கொஞ்சி போன் பேசியதை பாக்கியா கேட்டு விடுகிறார். ஆனால் அதையும் கோபி பொய் சொல்லி சமாளிக்க, கோபி நடந்து கொள்வது எல்லாம் சரியாக இல்லை என பாக்கியா நினைக்கிறார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி மாட்டுவது எப்போது? மனம் திறந்த பேபி ஷெரின்! வைரலாகும் வீடியோ!
மறுபக்கம் மயூரா தன்னை இனியா போனில் பார்த்ததாக சொல்ல, அது நான் இல்லை என அங்கேயும் பொய் சொல்லி சமாளிக்கிறார். கோபி பாக்கியாவிடம் வசமாக மாட்டிக் கொள்வாரா, அடுத்து கோபி ராதிகாவை திருமணம் செய்வாரா பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுப்பாரா, கோபி இனியா மீது இவ்வளவு பாசமாக இருக்கும் நிலையில் குடும்பத்தை எப்படி விடுவார் என பல அதிரடி திருப்பங்கள் இனி வரும் நாட்களில் இருக்க போகிறது.