நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரியவில்லை – இயக்குனர் கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக கலக்கி வரும் நடிகர் தனுஷ் தனது மனைவியை பிரிய இருப்பதாக அறிவித்த நிலையில், அது குறித்து தனுஷின் அப்பா விளக்கம் அளித்து இருக்கிறார்.
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து:
சிறந்த நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக மக்கள் மனதில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ். கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை தனுஷ் காதலித்து திருமணம் செய்ததால் அவரது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் அதை எல்லாம் தாண்டி பல காதல் கதைகளுக்கு முன் உதாரணமாக இருவரும் 18 ஆண்டுகள் வாழ்ந்தனர்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி மாட்டுவது எப்போது? மனம் திறந்த பேபி ஷெரின்! வைரலாகும் வீடியோ!
இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். சென்ற ஆண்டு ஐஸ்வர்யா பிறந்தநாள் அன்று தனுஷ் காதல் பாடல் ஒன்றை பாடி ஐஸ்வர்யாவிற்கு சர்ப்ரைஸ் செய்தார். மேலும் கடந்த நவம்பர் மாதம் தனுஷிற்கு அசுரன் படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதை பார்க்க தனது குடும்பத்துடன் தனுஷ் வந்திருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் இருவரும் பிரிய இருப்பதாக நேற்று அவர்களது சமூக வலைத்தளங்களில் ஒரே பதிவை ஷேர் செய்து இருந்தனர்.
புது சீரியலில் கமிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா, முல்லை மீண்டும் மாற்றமா? ஹேமாவின் பதில்கள்!
இது திரையுலகினர் மட்டுமல்லாமல், ரஜினி மற்றும் தனுஷ் குடும்பத்தையும் அதிர்ச்சி அடைய செய்தது. இது குறித்து தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறுகையில், தனுஷ் ஐஸ்வர்யா பிரியவில்லை. அவர்களுக்கு இடையே மனக்கசப்பு இருப்பது உண்மை தான். ஆனால் இருவரிடமும் குடும்பத்தினர் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறி இருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா இன்னும் தனது சமூக வலைத்தளங்களில் தனுஷ் பெயரை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.