தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை இல்லம் தேடி கல்வி திட்டம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என்று முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இல்லம் தேடி கல்வி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர் சுமார் 19 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 மாதங்களும், பிற வகுப்பு மாணவர்களுக்கு 1 மாதம் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதாவது கடந்த சில தினங்களாக உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே மாணவர்கள் கற்றல் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மீண்டும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதால் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் பள்ளிகள் திறக்கும் வரை தொடரும் என்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் 1416 மையங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் 450 உதவி ஆய்வாளர் உட்பட 10000 காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு!
இந்த திட்டத்தில் மாணவர்களின் ஈடுபாடு அதிகரித்தல் சுமார் 7 ஆயிரம் மையங்கள் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கற்றலை மேம்படுத்தும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் வரை மட்டுமே இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இதனை நடைமுறைப்படுத்தினால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உறுதுணையாக அமையும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
10th க்கு இல்லம் தேடி கல்வி வேண்டும்