மக்களே குட் நியூஸ்…வந்தாச்சு புதிய ரேஷன் கார்டுகள்…!! ” உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு”..!!
இந்திய குடிமக்களிடம் குடும்ப அட்டை இருப்பது கட்டாயமாகும். மேலும், மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் மானிய விலை உணவுப் பொருட்கள், பொங்கல் பரிசு, மகளிர் தொகை உள்ளிட்ட அனைத்து விதமான நலத்திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், ரேஷன் கார்டு கிராம வாரியான பட்டியல் கடந்த நவம்பர் மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளை வேண்டி லட்சக்கணக்கான பேர் விண்ணப்பிருந்த நிலையில், தற்போது 1.5 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுவதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கூடிய விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
























