நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் – எந்தெந்த கல்லூரிகளில் சேர வாய்ப்பு?
நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு எந்தெந்த கல்லூரிகளில் சேர வாய்ப்பிருக்கிறது என்பது குறித்தான அறிவிப்பு மற்றும் நீட் கவுன்சிலிங் செய்முறை குறித்தான முழு அறிவிக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நீட் கவுன்சிலிங்:
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், தற்போது நீட் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நீட் கவுன்சிலிங் செயல்முறை குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய அளவிலான மருத்துவ கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் – கல்வித்துறை நடவடிக்கை!
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 37 கல்லூரிகள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில் 15 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இராணுவ மருத்துவ கல்லூரி மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களிலும் சேர்க்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.