தமிழக பள்ளிகளில் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் – கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட இருக்கும் நிலையில் முதல் நாள் வகுப்பில் மாணவர்களின் உடல், மன நலன் காக்க பயிற்சி அளிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
சிறப்பு பயிற்சி:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வருகிற ஜூன் 7 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு மாதம் கழித்து பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கவும், மாணவர்களின் உடல், மன நலன் காக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் தொடக்க கல்வி, உதவி பெறும் பள்ளிகள்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு மேம்பட பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
SBI SCO வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || டிகிரி தேர்ச்சி போதும்!
அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் இந்த நிகழ்ச்சிகள் மூலம் உடல், மன நலம் பேணும் வகையில் கல்வியை பெறும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பை பெறுகின்றனர். மேலும் அரசு இதற்காக பள்ளிகளில் கண்ணொளி காப்போம் திட்டம், தேசிய குழந்தைகள் நலத்திட்டம், வாராந்திர இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.